இன்று சனிக்கிழமை
அவனுக்கு விடுமுறை
நான் அவனைப் பார்க்க வேண்டும்.
எனக்கு விடுமுறையில்லை.
இருந்தாலும்
மதிய இடைவேளையில்
அவன் முகம் பார்க்க
கணனி நோக்கி செல்கின்றேன்.
இருவரும் சந்தித்தோம்.
ஒரு மணிநேர இடைவேளியில்
இருவர் கண்களும் கதைபேசின,
அப்போதுதான் நேரம் பார்த்தேன்
நாற்பத்தைந்து நிமிடங்கள் போய் விட்டது.
“ ஏதாவது பேசன்டா ”
”அப்புறம் ”சொன்னான்.
அதுவே வார்த்தை
இருவரும் பார்வையில் சொர்க்கம் கொண்டோம்.
நேரம் போய் விட்டது.
போக மனமின்றி விடைபெற்றேன்.
அடுத்த சனிக்கிழமையை எதிர்பார்த்து...