பருவ நிலா தவிக்கிறது -மேனி
மெல்லமெல்ல மெலிகின்றது
உணர்வென்ற போர்வைக்குள்ளே
தன்னை
உருக்குலைத்துக் கொள்கின்றது.
கன்னியவள் மனதுக்குள்ளே
கன்னிவெடி புதைக்கின்றாள்.
காதல் போதை உண்டபின்பு
கண்ணீர் ஏன் வடிக்கின்றாள்.
நெருங்கி வரத்துடிக்கும்
குயிலின் குரல் மட்டும் ஒலிக்கின்றது.
கோடை மழையில் தலைநனைந்து
ஜொரம் என்னை வதைக்கின்றது.