நான்
அவன் மடிமீது தலைவைத்தேன்.
ம்ம்ம்ம்..........
அவன்
இரு கைகளினாலும்
என் தலை கோரியபடி......
பேசிக்கொண்டே நானவன் மடியில்
என் வாழ்வின் சொர்க்கம்......
ஆனால் அவன் பேசவில்லை.
என் கண்ணில் இருந்து நீர்த்துளிகள்.
ஏன் அழுகின்றேன் எனக்கே தெரியவில்லை,
அவன் மடியில் தானே தூங்குகின்றேன்.
இது நீடிக்காத ஒன்று
வெற்றி பெறாக் காதல்
என்னவனே..!
என்று எழுந்தேன்
கடவுளே..!
அது கூடக் கனவுதான்,
காதலனின் மடியின்
தூக்கம் சுகம்தான்.